Wednesday 27 March 2013

மேருவை சேர்ந்த காகமும் பொன்னாம்

"சடைச்சங்கத்தில் குமரியாறு மற்றும் பஃறுளியாறு உற்பத்தியான மேருமலை இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் சீன பழங்கதைகளில் (CHRONICLES) கூட தென்படுகின்றன.[12] பாண்டிய மன்னனொருவன் தங்க சுரங்கங்களை தோண்ட சீன அடிமைகளை பயன்படுத்தினான். அவர்களை பொன் தோண்டி எறும்புகள் என இலக்கியம் கூறுகிறது.[13] மேருவைச் சேர்ந்த காகமும் பொன்னாம் என்ற பழமொழியுமுண்டு.

இந்த வாசகத்தை நான் Ancient India  என்ற நூலிலிருந்து எடுத்தேன். இதில் குறிப்பிடப்படும் சீன பழங்கதை எது என்று தெரியவில்லை.


Google Maps satellite image on 2013 showing the mountain ridge named Ninety East Ridge or 90E Ridge or 90°E Ridge(http://en.wikipedia.org/wiki/Ninety_East_Ridge) which is approximately 5,000 kilometers (3,100 mi) in length and resembles the supposed mountain called as 'Meru Mountain'(Tamil:மேரு மலை) of Hypothetical lost continent Kumari(Tamil:குமரிக்கண்டம்))

File:NinetyEastRidge.jpg

ஆனால் இங்கு பழமொழி என்று நான் குறிப்பிடும் "மேருவைச் சேர்ந்த காகமும் பொன்னாம்" என்பதை ஆய்ந்ததில் சில விடயங்களை புரிந்தது.

http://en.wikipedia.org/wiki/Ninety_East_Ridge

மேற்கொடுத்துள்ள மலையை தான் மேருவாக இருக்கலாம் என்று தமிழ் ஆர்வலர்கள் கருதுவர்.

1. "மேரு" என்பது உயர்ந்த சிகரங்களை கொண்ட மலைத்தொடருக்கோ/மலைக்கோ கொடுக்கும் பெயராகும்.

2. "காகமும்" என்ற வார்த்தையை ஆய்ந்தோம் எனில் இந்த மேரு மலைப்பகுதியில் காகம் இருந்தது எனக் கொள்ள முடியும்.

3. "பொன்னாம்" என்ற வார்த்தையை ஆய்ந்தோம் எனில் இங்கு நிச்சயம் தங்கச்சுரங்கள் இருந்திருக்கும். இதை குறிப்பிடும் சீனப்பழங்கதை எது என்று தெரியவில்லை.

தற்போது கடலியல் ஆய்வு செய்யும் அறிஞர்களின் ஆய்வை சற்று எளிமைப்படுத்த வேண்டுமெனில் இன்று மூழ்கிக் கிடக்கும் 90 கோண மலையின் உச்சிப் பகுதியில் (அதாவது நிலத்திலிருந்து பார்க்கும் போது ஆழம் குறைந்த பகுதி) காகங்கள் வாழும் பகுதியாகவும் (2) பொன் சுரங்கள் இருப்பதற்கு அதிக இடமளிக்கும் சிகரமாகவும் (3) இருக்கும் இடங்களை தேர்ந்தெடுத்து ஆய்ந்தால் ஏதாவது தடயங்கள் கிடைக்க வாய்ப்புண்டு. இந்த சிகரங்களில் சில தீவுகளாக இருக்க வாய்ப்புண்டு.

காகங்கள் ஏதும் கிடைத்தால் அவற்றை மரபணு ஆய்வு மேற்கொண்டு அவை எத்தனை ஆண்டுகளாக அங்கு இருக்கின்றன என்று கண்டறிய வேண்டும்.

பழமொழிகள் கண்டுபிடிப்புகளை எளிதாக்கும் என்றே நாம் நம்புவோம்.