வேளிர் வடக்கில் இருந்து வந்தனர் என்பது கேள்விக்குட்படுத்த வேண்டிய கருதுகோளாகும்.
"வடபால் முனிவன் தடவினுள் தோன்றி"
வடபால் முனிவன் தடவினுள் தோன்றி என்று தான் ஓலை படிக்கப்பட்டது. ஆனால் தடவினுள் என்ற சொல்லில் வரும் 5 எழுத்துக்களுக்குப் பதிலாக நான்கு எழுத்துக்களே உள்ளன. மேலும் அகத்தியர் வடமொழி புராணங்களில் வேளிரை அழைத்துவந்ததாக யாதொரு சான்றும் இல்லை. அப்படி ஏதும் சான்றிருந்தால் தரவும்.
வடபால் முனிவன் தடவினுள் தோன்றி என்ற வரிகள் வரும் சொற்கள் அட்டச்மென்டில் என்னால் வட்டமிடப்படுள்ளது. பார்க்கவும். மேலும் இதில் துவரை எனக்கூறப்பட்டது தென்னக துவரங்குறிச்சி அல்லது துவாரசமுத்திரமே அன்றி கண்ணன் ஆண்ட துவாரகை அல்ல.
வேளிர் என்போர் முல்லை நிலம் உருவாகிய காலத்தில் அங்கு புதிய கற்காலம் முதலே திணை, கம்பு, வரகு போன்ற தானிய்னக்களை பயிரிட்டு வாழ்ந்தோர் ஆவர். ஈழத்திலும் வேளிர் வாழ்ந்த இடங்கள் அப்படித்தான் உள்ளன. அதனால் வேளிர் வடக்கில் இருந்து வந்தனர் என்பது அடிப்பட்டுப் போகிறது. மேலும் தடவினுள் வேளிர் தோன்றுவது என்று உலகமகா கற்பனையை ஒட்டி இன்னும் வரலாறு எழுதிக்கொண்டிருப்பது தமிழக வரலாற்றுத்துறைக்கே இழுக்காகும்.
இது பாண்டியர் வரலாறு பற்றிய வர்லாறு மட்டும் கூறும் தளமாக இருந்தாலும் வேளிரை விளக்காமல் பாண்டியர் தோற்றம் பற்றி விவரிக்க முடியாது என்பதால் இப்பதிவும் இங்கு இடம்பெறுகிறது. அடுத்த பதிவில் வேளிரின் மூலம் பற்றிப் பார்க்கலாம்.