Showing posts with label ஒப்பியல் முடிவுகள். Show all posts
Showing posts with label ஒப்பியல் முடிவுகள். Show all posts

Sunday, 14 July 2013

மார்க்கோ போலோ குறிப்புகளும் கூம்போடு மீப்பாய் களைதலும்

இதைப் படிப்பவர்கள் நான் முன்பு எழுதிய கூம்போடு மீப்பாய் களைதல் என்னும் முந்தைய பகுதியையும் படித்தால் சிறப்பு.

http://fromthenmaduraitotenkasi.blogspot.in/2013/05/blog-post_22.html - கூம்போடு மீப்பாய் களைதல்

நான் கூம்பொடு மீப்பாய் களைதல் பதிவை இட்ட போது அதன் முடிவில் பாய்மரத்தை கட்டும் மரக்கூம்பு மடித்து வைக்குமாறு உருவாக்கப்பட்டதா எனக் கேட்டிருந்தேன். ஆனால் தற்பொது மார்க்கோபோலா குறிப்புகளில் 13ஆம் நூற்றாண்டில் அது போன்ற கப்பல்களை சப்பானியர் பயன்படுத்தினர் எனத் தெரிகிறது. அவர் எழுதிய குறிப்புகளை பார்ப்போம்.

வியாபாரிகள் பயணிக்கின்ற தேவதாரு மரங்களால் செய்யப்பட்டிருந்தன. பல பாய்களைக் கொண்ட நான்கு பாய்மரங்கள் அமைக்கப்படுகின்றன. அதில் இரண்டு பாய்மரங்கள் ஏற்றி இறக்கி தேவைக்கேற்ற உயரத்தில் வைத்துக்கொள்ளும் அமைப்போடு இருந்தன.

இப்போது மார்க்கோ போலோ குறிப்புகளையும் சங்க காலச் சான்றுகளையும் ஒப்பிடலாம்.

பல பாய்களைக் கொண்ட நான்கு பாய்மரங்கள் அமைக்கப்படுகின்றன. 


கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பரதவர்உபயோகித்த கலம். நான்கு பாய்மரங்களைக் கொண்டது


அதில் இரண்டு பாய்மரங்கள் ஏற்றி இறக்கி  

கோடிக் கோடுங் கூம்புயர் நாவாய் - சீவக சிந்தாமணி 2331


தேவைக்கேற்ற உயரத்தில் வைத்துக்கொள்ளும் அமைப்போடு இருந்தன.


கூம்புமுதன் முருங்கவெற்றிக் காய்ந்துடன்
(மதுரைக்காஞ்சி.376)


கூம்பொடு
மீப்பாய் களையாது மிசைப்பரந் தோண்டாது - 
(புறநானூறு.30:10-15)


ஆக இதிலிருந்து அறிவது யாதெனில் கூம்பொடு மீப்பாய் களைதல், கூம்புயர் நாவாய்,  கூம்பு முதன் முருங்க வெற்றி போன்ற சொற்றொடர்கள் தமிழர் உபயோகித்த கலங்களில் மீப்பாய் தேவைக்கேற்ப மடக்கியும் விரித்தும் களைந்தும் களையாமலும் கூம்பை உயர்த்தியும் தாழ்த்தியும் பயன்படுத்துமாறு அமைக்கப்பட்டன எனத் தெளிவாகத் தெரிகிறது.

Thursday, 14 February 2013

பரங்குன்றின் உருவெழுத்து சுட்டுவதென்ன?


சமீபத்தில் கா.ராஜன் என்ற ஆய்வாளரிம் மாணாக்கர் திருப்பரங்குன்றில் மேலுமோர் கல்வெட்டை கண்டறிந்தனர்.
இதில் முதன்வரியில் உள்ள கடைசி எழுத்து உருவ எழுத்தெனில் இப்பொறிப்பு மாங்குளம் கல்வெட்டுகளுக்கு முற்பட்டதே.

இது போல் கடைசி எழுத்து உருவ எழுத்தாக இருக்குமெனில் அதை கி.மு. 500 - 300 ஆண்டுகள் பழமை ஆனதென்பார் காசிநாதன். இது போலவே கொங்கர் புளியங்குளம் (கல்வெட்டு எண் 12, 13), விக்கிரமங்கலம் (கல்வெட்டு எண் 9), அழகர்மலை (கல்வெட்டு எண் 36, 38, 40, 41, 42, 43, 46, 47) ஆகிய இடங்களில் காணப்படும் தமிழ் பிராமி கல்வெட்டுகளில் இறுதியில் உள்ள ஒன்று அல்லது இரண்டு எழுத்துகள் உருவ எழுத்துக்களாக உள்ளன. இந்த எழுத்துக்கள் அக்குகை செய்யத் தேவையான பொன்னின் மதிப்பை சுட்டுகின்றன என்பார் மயிலையார்.

இனி என் கருத்துகள்:

இதற்கு ஏற்றாற் போலவே கொங்கர் புளியங்குள கல்வெட்டுகள் கூறையோடு ஈத்தவன் பொன் என்றும் பிட்டன் ஈத்த பொன் எனக்குறிப்பிட்டு பொன்னின் மதிப்பையும் எதற்கு பொன் ஈந்தான் என்பதை சதுர எழுத்த்தாக்வும் பொறித்தனர் எனலாம்.
மேலும் அழகர்மலைக்கு இன்னின்னார் இவ்வளவு பணம் ஈந்தனர் என்று தெளிவாகவே உள்ளதாகவே நான் அனுமானிக்கிறேன். அவை.

1. மதிரை பொற்கொல்வான் ஆதனாதன் - இவன் பணகாரன் என்பதால் இவன் கொடுத்த பொன்னின் மதிப்பில் வட்டத்தின் நடுவில் கோடும் வட்டத்தின் வெளியில் மூன்று கோடுகளும் உள்ளன.

2. மதுரை உப்பு வாணிகன், அவனது மக்ன் ஆதனாதன், வழுதி, நெடுமலன், பணித வணிகன், கோழி வாணிகன் எலவ நாகன் - இவர்கள் பொற்கொல்லன் அல்ல. 
வாணிகன் என்பதால் இவர்கள் கொடுத்த பொன்னின் மதிப்பில் வட்டத்தின் வெளியில் மூன்று கோடுகள் மட்டுமுளன.

3. திரைநாடன், ஈழவாயிரவன் - இவர்கல் வரி வசூலிப்பர் என்று கொண்டால் இவர்கள் மிகக்குறைவாக பொன்னீந்தர் எனக்கொள்ளலாம். அதனால் இவர்கள் ஈந்த பொன்னின் மதிப்பில் வட்டத்தின் நடுவிலோ வெளியிலோ கோடுகல் இல்லை.

பரங்குன்று:
இப்பரங்குன்றில் காணப்படும் சூல வடிவெழுத்து அவர்கள் சூலத்தை வழிபடும் இடத்தை கொடுத்தநர் எனக்குறிக்கலாம். இச்சின்ன வழிபாடுகள் மூன்றாம் நிலையிலுள்ளவை. பினவரும் குத்துக்கல்வலசையிலுள்ள சூல பீடத்தை பார்க்கவும். 


இதன் பின்னரே உருவ வழிபாடு எழுந்தது. முதலில் கொற்றவையை சூலமாகவே வழிபட்டு பின்னர் உருவமாக வழிபட்டனர் என்பதை இது சுட்டுகிற‌து. இதற்கு ஏற்றாற் போலவே மூசக்தி என்ற பெயரும் கீழேயே பொறிக்கப் பட்டிருந்தது.

பிற்பாடு பொன்னின் மதிப்பை குறிப்பதற்கு காணம் என்ற சொல்லை உபயோகித்தனர் என்பது "காணம் கொட்டுபித்தவன்" என்று தமிழி எழுத்துக்கள் மூலமே அழகர்மலை கல்வெட்டில் பொறித்தை வைத்து நிறுவிட முடியும் இதில் பொன்னின் மதிப்பை குறிக்கும் உருவெழுத்து இல்லை.

அதனால் பரங்குன்றின் கல்வெட்டு சூல பீடத்தை உருவ எழுத்தாகவே குறிப்பதால் இது மாங்குளம் கல்வெட்டுக்கு முந்தியவை. நடன காசிநாதன் இக்கல்வெட்டு கி.மு. 500 கலைச் சேர்ந்தது என ஒரு கட்டுரை வெளியிடுவார் என நாம் எதிர்பார்ப்போம். 

இந்து நாளிதற்செய்தி
http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/tamilbrahmi-script-discovered-on-tirupparankundram-hill/article4412125.ece

Sunday, 12 August 2012

தமிழகத்தின் உலோகக்காலமும் மூலத்தமிழ் எழுத்தும்

தமிழகத்தில்  இரும்புக்காலம் கி.மு. 2000 அளவில் தோன்றியதாக கூறுகின்றனர், இதை பின்வருவன கொண்டு நிறுவலாம் 

௧. தமிழக முத்திரைக் காசு வார்ப்புக் கூடுகள் (http://ta.wikipedia.org/s/15jq

தமிழகத்தின் முத்திரைக் காசுகள் பெரும்பாலும் பொ.மு. 5ஆம் நூற்றாண்டு முதல் பொ.மு. 2ஆம் நூற்றாண்டினவையாக இருக்கின்றன.  

பொ.மு. 5ஆம் நூற்றாண்டு  காசுகள்

ஊர்மாவட்டம்நூற்றாண்டு (பொ.மு.)
மாம்பலம்சென்னை5
வெம்பாவூர்திருச்சி5
வீரசிகாமணிநெல்லை5
தாராபுரம்ஈரோடு5

தமிழகத்தில் முத்திரைக் காசுகளை வெளியிட பயன்படுத்திய வார்ப்புக் கூடுகள் கிடைத்ததை வைத்து தமிழர் அந்த வார்ப்புக் கூடுகளை செய்ய எவ்வளவு காலம் முயன்றிருப்பர் அக்கூட்டின் பயன்படுத்தப்பட்ட உலோக உருக்கு முறை தோன்றி அது தமிழகத்தில் முழு வழக்கில் வர எவ்வளவு நூற்றாண்டுகள் பிடித்திருக்கும் என்று என்னிப்பார்ர்க்க வேண்டும். அப்படி ஆராய்வோமானால் குறைந்தது கி.மு.1500கலிலேயே உலோக காலம் கண்டதாக கூறலாம்.

௨. http://www.hindu.com/2005/02/17/stories/2005021704471300.htm (Rudimentary Tamil-Brahmi script' unearthed at Adichanallur)

இந்த செய்தியில் உள்ள பானைகள் "preliminary thermo-luminescence dating," முஉளம் குறைந்தது கி.மு. 500 முதல் அதிகபட்சம் கி.மு. 1500வரை பழமை வாய்ந்தது அறியப்பட்டன. இதை சிவசுப்பிரமணியன் போன்ற ஆய்வாளர்கள் மூலப் பிராமி என சந்தேகிக்கின்றனர். இது தமிழ் பிராமி போன்ற பிராமி எழுத்துக்களின் தாய் என ஆராய்ச்சியாளர்களால் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டால் தமிழ் எழுத்துகளின் தோற்றம் கி.மு. 1500 வரை கூட செல்லக்கூடும்.


கேள்விகள்

௧. preliminary thermo-luminescence dating என்றால் என்ன?
௨. //This date is, however, subject to confirmation by carbon-14 dating, which is the more reliable method.// 

என்று சத்திய மூர்த்தி கூறுவதைப் பார்த்தால் என் carbon-14 dating மூலம் இதன் காலம் நிறுவப்படவில்லை? ச்ய்தி வந்து (Feb 17, 2005) பல வருடங்கள் ஆகிவிட்டதே?

௩. carbon-14 dating உலோகங்களுக்கு மட்டும் தான் செய்ய இயலுமா? கல்வெட்டுகளுக்கு செய்ய இயலாதா?

௪. முடியாது எனில் கல்வெட்டு எழுத்து வெட்ட பயன்படுத்தப்பட்ட கருவியின் துகள்கள் எழுத்துகளில் படிந்திருக்குமே? அதை வைத்து ஆராய்ந்தால் என்ன?

சில ஒப்பிடுகள்



 

இப்படத்தில் உள்ள எழுத்தின் குறைந்த பழமையே கி.மு. 500 எனில் பின்வரும் படத்தோடு இந்த எழுத்துக்களை ஒப்பிட்டு பார்த்தால் கிமு. 500ல் இருந்து கி.பி. நூறு வரை பெரிய மாற்றம் எழுத்தில் இல்லை என்பதை அறிய இயலும்.

படிமம்:History of Tamil script.jpg 

அதாவது காலம் பின்னோக்கி செல்லச் செல்ல எழுத்துக்களில் ஏற்படும் மாற்றத்துக்கான காலமும் கூடிக் கொண்டே போகிறது. 

உதாரணம்

௧. கிபி. இரு நூறு முதல் கிபி. முன்னூறு வரை ஒரு மாற்றம் - கால இடை வேளை - நூறு வருடங்கள் 
௨. கிமு,  முன்னூறு முதல் கிபி நூறு வரை ஒரு மாற்றம்- கால இடை வேளை - நான் நூறு வருடங்கள்


இது இப்படி இருக்கையில்


என் முந்திய பதிப்பான "தென்காசியில் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மைக் கல்வெட்டு" என்னும் இணைப்பில் உள்ள கல்வெட்டு எழுத்துக்கள் பன் மடங்கு மாற்றம் அடைந்ததை பார்க்கும்  போது இதை கிமு 2000த்தில்  பொறிக்கப்பட்டது என்று கூறினாலும் தகும் என்பேன்.


படிமம்:சன்யாசிப்படவுக் கல்வெட்டு.JPG 

Saturday, 21 July 2012

தென்காசியில் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மைக் கல்வெட்டு


மேலே நீங்கள் காண்பது குற்றால மலையிலுள்ள தேனருவி பக்கத்தில் சன்யாசிப்  படவு என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 2500 வருடங்களுக்கு முற்பட்ட கல்வெட்டு.

 இதில்  காணப்படும் எழுத்துக்கள்  சில மூலப் பிராமி எழுத்துக்கள் போல் இருந்தாலும் இதை கல்வெட்டு ஆய்வாளர்களால் முழுவதுமாக படிக்க இயலவில்லை.

இதிலுள்ள எழுத்துக்களில் சில கி.மு. முன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகத் தெரிகிறது. மற்றவை அதற்கும் முந்திய எழுத்துக்களாக இருக்கலாம். இவற்றில் காணப்படும் எழுத்துக்கள் சில கி.மு. முன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த மாங்குளம்  கல்வெட்டுகளிலுள்ள எழுத்துக்களுடன் பொருந்தாததால் இதை  அக்கல்வேட்டுகளுக்கு முந்தியவையாகவே கொண்டுள்ளனர். இதன்  மாதிரி  குற்றாலம் தொல்லியல் அருங்காட்சியகத்தில் உள்ளது.

இப்பொதியில் மலையை ஆண்ட மன்னர்கள்

1. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் இதை ஆயர் குல மன்னர்களிடமிருந்து கைப்பற்றியதாக மதுரைக்காஞ்சி பாடல்கள்  உண்டு. அவை,

அவை இருந்த பெரும்பொதியில் பேய்மகளிர் ஆடத் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் வென்றான் -மதுரைக்காஞ்சி 161

தென்னவன் பெயரிய துன் அருந் துப்பின் தொன்முது கடவுள் பின்னர் மேய, வரைதாழ் அருவிப் பொருப்பின் பொருந” – மதுரைக்காஞ்சி 40-43

கழல்தொடி ஆஅய் மழைதவழ் பொதியில் - குறுந்தொகை 84

2. திதியன் என்ற மன்னன் பொதியிலை ஆண்டான்.

செல்சமம் கடந்த வில்கெழு தடக்கை, பொதியிற் செல்வன் பொலந்தேர்த் திதியன், இன்னிசை இயத்தின் கறங்கும் கல்-மிசை அருவி (குற்றாலம்) – ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் – அகம் 25

3. திதியன் என்றவனை தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் வென்றான்.
கொய்சுவற் புரவிக் கொடித்தேர்ச் செழியன்
ஆலங் கானத்து அகன்தலை சிவப்பச்,
சேரல், செம்பியன், சினம்கெழு திதியன் -  அகம் 36


என் கருத்து
கள் 


*  இதனால் பொதியில் ஆயரிடத்தும் பாண்டியரிடத்தும் இருந்தது தெரிகிறது.
* தமிழ்நாட்டில் முற்கால கல்வெட்டுகள் கிடைத்த குகைளெல்லாம் வேந்தர்களாலும் குருநிலத்தவர்களாலும் முனிவர்களுக்கு வழங்கப்பட்டவை என கல்வெட்டுகள் முலம் தெரிகிறது.
* அதனால் இக்குகைக்கல்வெட்டுகளும் இதைப் போன்ற செய்தியையே தருவதாகக் கொள்ளலாம்.

நான் ஐயப்படும் சில எழுத்துக்கள்
* இதிலுள்ள முதல் வரியின் ஐந்தாம் எழுத்து ந் போல் தெரிகிறது. அதே போல் முதல் வரியின் இரண்டாம் எழுத்து 'ந'கரத்தில் வேறொரு எழுத்தாக இருக்கலாம். முதல் வரியின் நான்காம் எழுத்து 'ங்'கரம் போலும் உள்ளது.
* இரண்டாம் வரியின் முதல் எழுத்து 'வ'கரம் போலும், நான்காம் எழுத்து 'ல'கரம் போலும், ஐந்தாம் எழுத்து  'ர'கரம் போலும், உள்ளது.

சேசாத்ரி அவர்கள் ஐயப்படும் எழுத்துக்கள்


இரண்டாம் வரியின் முதல் எழுத்து வகரம் அல்ல. இனறைய தெலுங்கில் அது ரகர ஒலி. இவ் எழுத்துகளில் பக்கவாட்டில் சிறிதாக உள்ள ஒற்றை இரட்டைக் கோடுகள் எதைக் குறிக்கின்றன என்று புரியவில்லை. உகர ஊகார ஒலிகளாக் இருக்கமோ என ஐயப்படுகிறேன் இதன் முதல் எழுத்தில் மேலே புள்ளியுடன் உள்ள எழுத்து எகரம் ஆகலாம்

இரண்டாம் வரியில் உள்ள நடு எழுத்து இதாவது, முக்கோணம் சிந்து எழுத்தில் மகரம் ஆகும் . எனவே இரண்டாம் வரியின் இறுதி மூன்று எழுத்துகளை மேலுரூ > மேலூர் என படிக்கலாம்.

இது என்னவோ பிராமியும் சிந்து எழுத்தும் கலந்த ஏதோ ஒரு மாற்று எழுத்து போலத் தான் தோன்றுகிறது. இதில் ச் + ஒ, ந + ஊ போன்றும் உயிர்மெய், உயிர் என பிரித்து குறிப்பிட்டு இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் இது பிராமி அல்ல என்பது மட்டும் தெளிவு.


அஸ்கோ பர்பொலோ கருத்தோடு என் ஒப்பீடு


சிந்துவெளி ''ம'' ஒருவேளை இதில் பொறிக்கப்பட்டிருப்பின் 2ஆம் வரியின்
முதல் எழுத்து வெள்ளி மீனின் சிந்துவெளிக் குறியீடாகவும் இருக்கலாம்.
ஏனென்றால் முறையே 2 வெள்ளிக்கும் 6 கார்த்திகைக்கும் 7 சப்தரிசி
மண்டலத்துக்கும் ஊரியவை. இங்கு காணப்படும் 2ஆம் வரியின் முதல் எழுத்து மீன் போலுள்ளது.

- அஸ்கோ பர்போலா கொடுத்துள்ள ஊகத்தின் அடிப்படையிலான விளக்கங்கள்.



உதவி தேவை

* இதைப்படிக்க நிறைய நபர்களிடம் கேட்டிருக்கிறேன். உங்களுக்குத் தெறிந்த கல்வெட்டு ஆய்வாளர்கள் எவராவது இருந்தால் அவர்களிடம் தெரிவித்து இதைப் படிக்கச சொல்லவும். தகவலறிந்தால் தெரிவியுங்கள்.