ஆயிரத்தில் ஒருவன் படம் தமிழருக்கு எதிரானது. பதிமூன்றாம் நூற்றாண்டு சோழநாட்டை ஆண்டது சோழரே அல்ல. பிறமொழி சாளுக்கியர்கள்.
தமிழ்ச்சோழரான விஜயாலயன் தமிழ் வேளிரான இருங்கோவேள் மரபில் வந்த கொங்குச்சோழர் அபிமானன் கொங்கு நாட்டில் இருக்க பிறமொழி சாளுக்கியரான குலோத்துங்கன் சோணாட்டு அரியணை ஏறியதே தமிழர் மரபுக்கு எதிரானது. குலோத்துங்கன் தமிழ்ச்சோழரான அதிராஜேந்திரச்சோழனை கொன்றுவிட்டு சோணாட்டு அரியணை ஏறியதாக சொல்லும் சாளுக்கியர் நூல் குறித்தும் பதிவில் சொல்லப்பட்டுள்ளது.
கிபி 1069ல் உருவாக்கப்பட்ட சைவ வைணவ கலவரம் வலங்கை இடங்கை கலவரம் யாரால் மூட்டப்பட்டது என்பதையும் காணொளியில் கூறியுள்ளேன்.
ஈழம் வரலாற்றடிப்படையில் சோழர் அரசாங்கம் கீழ் இருந்ததை விட பாண்டியர் கீழ் தான் அதிகம் இருந்துள்ளது.
ஆனால் திரைப்படத்தில் சாளுக்கியர்கள் ஈழத்தமிழர் போலவும் பாண்டியர்கள் தற்கால சிங்களப்படை போல பெண்களை வன்புணர்ந்ததாகவும் காட்டியுள்ளார் செல்வராகவன்.
எனில் பாண்டியர்களுக்கு எதிரான வன்மத்தையே ஆயிரத்தில் ஒருவன் படம் மூலம் செல்வராகவன் விதைத்துள்ளார். செல்வராகவனின் தாத்தா பெயர் ராம்சாமி நாயுடு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இன்னும் பல தகவல்கள் பாண்டியர்கள் பற்றி இந்த காணொளியில் உள்ளன. - தென்காசி சுப்பிரமணியன் ( Sundaram Muthiah Rajasubramanian )
https://youtu.be/J6dXL377XXA
No comments:
Post a Comment