Sunday 14 July 2013

மார்க்கோ போலோ குறிப்புகளும் கூம்போடு மீப்பாய் களைதலும்

இதைப் படிப்பவர்கள் நான் முன்பு எழுதிய கூம்போடு மீப்பாய் களைதல் என்னும் முந்தைய பகுதியையும் படித்தால் சிறப்பு.

http://fromthenmaduraitotenkasi.blogspot.in/2013/05/blog-post_22.html - கூம்போடு மீப்பாய் களைதல்

நான் கூம்பொடு மீப்பாய் களைதல் பதிவை இட்ட போது அதன் முடிவில் பாய்மரத்தை கட்டும் மரக்கூம்பு மடித்து வைக்குமாறு உருவாக்கப்பட்டதா எனக் கேட்டிருந்தேன். ஆனால் தற்பொது மார்க்கோபோலா குறிப்புகளில் 13ஆம் நூற்றாண்டில் அது போன்ற கப்பல்களை சப்பானியர் பயன்படுத்தினர் எனத் தெரிகிறது. அவர் எழுதிய குறிப்புகளை பார்ப்போம்.

வியாபாரிகள் பயணிக்கின்ற தேவதாரு மரங்களால் செய்யப்பட்டிருந்தன. பல பாய்களைக் கொண்ட நான்கு பாய்மரங்கள் அமைக்கப்படுகின்றன. அதில் இரண்டு பாய்மரங்கள் ஏற்றி இறக்கி தேவைக்கேற்ற உயரத்தில் வைத்துக்கொள்ளும் அமைப்போடு இருந்தன.

இப்போது மார்க்கோ போலோ குறிப்புகளையும் சங்க காலச் சான்றுகளையும் ஒப்பிடலாம்.

பல பாய்களைக் கொண்ட நான்கு பாய்மரங்கள் அமைக்கப்படுகின்றன. 


கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பரதவர்உபயோகித்த கலம். நான்கு பாய்மரங்களைக் கொண்டது


அதில் இரண்டு பாய்மரங்கள் ஏற்றி இறக்கி  

கோடிக் கோடுங் கூம்புயர் நாவாய் - சீவக சிந்தாமணி 2331


தேவைக்கேற்ற உயரத்தில் வைத்துக்கொள்ளும் அமைப்போடு இருந்தன.


கூம்புமுதன் முருங்கவெற்றிக் காய்ந்துடன்
(மதுரைக்காஞ்சி.376)


கூம்பொடு
மீப்பாய் களையாது மிசைப்பரந் தோண்டாது - 
(புறநானூறு.30:10-15)


ஆக இதிலிருந்து அறிவது யாதெனில் கூம்பொடு மீப்பாய் களைதல், கூம்புயர் நாவாய்,  கூம்பு முதன் முருங்க வெற்றி போன்ற சொற்றொடர்கள் தமிழர் உபயோகித்த கலங்களில் மீப்பாய் தேவைக்கேற்ப மடக்கியும் விரித்தும் களைந்தும் களையாமலும் கூம்பை உயர்த்தியும் தாழ்த்தியும் பயன்படுத்துமாறு அமைக்கப்பட்டன எனத் தெளிவாகத் தெரிகிறது.

1 comment:

  1. இலக்கியத்தில் அறிவியல் குறித்த செய்திகள் நிறையவே இருக்கலாகும்.

    கப்பற்கலை குறித்த தொன்மச் செய்திகளை தொகுக்கலாகும். அதாவது 'பழந்தமிழ் இலக்கியத்தில் தாவரவியல், விலங்கியல் என்பது போன்று, கப்பற்கலை குறித்த தொன்மச் செய்திகளை தொகுக்கலாகும்.

    ReplyDelete