Saturday 18 August 2012

பெருங்கற்கால கிராமமா தென்காசி ?

எனக்கு தென்காசியில் ஒரு இடத்தைக் கண்டு நெடுநாட்களாக ஒரு ஐயம் உண்டு. அதை நீங்கள் "சூலம்" என்ற தொடரில் கண்டிருக்கலாம். நான் அது என்ன இடம் என்று இறுதியில் படத்தோடு இணைத்துள்ளேன்.
அதைப் பார்ப்பதற்கு முன் பெருங்கற்கால செண்பகப்பொழிலுக்கு (தென்காசி) சென்று வருவோம்.

செண்பகப்பொழிலில் தமிழக தொல்லியல் ஆய்வுத்துறையைச் சேர்ந்த சம்பத் மற்றும் செந்தில் செல்வக்குமாரன் போன்ற ஆய்வாளர்கள் அழுதகன்னி ஆற்றை 1980களில் ஆய்ந்ததில், இந்த ஆற்றுப்படுகையில் இடைக்கற்கால ஆயுதங்கள் மற்றும் பெருங்கற்கால நில அடையாளக் கற்குவைகளும் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன.

இது தவிர்த்து ஆயிரப்பேரி என்ற இடத்தில் கண்டறியப்பட்ட பெருங்கற்கால பானைகள் இன்று குற்றாலம் தொல்லியல் அருங்காட்சியகத்துள் (http://www.tnarch.gov.in/sitemus/mus10.htm) வைக்கப்பட்டுளது. இடைக்கற்காலம், புதிய கற்காலம், பெருங்கற்காலம் மூன்றும் வரிசையாக வருவன. இம்மூன்று காலப் பொருட்களும் இங்கு தொடர்ந்து கிடைக்கின்றதால் இங்கும் தங்கள் நிலையான குடியிருப்புக்களை மக்கள் தொடர்ந்து அமைத்துக் கொண்டது தெரிகிறது.

நான் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற போது அதனருகில் பானை செய்யும் குயவர்கள் இருந்தார்கள். அவர்களின் வீடமைப்பு முறை சாய்வான நிலங்களில் ஊட்டியில் உள்ளது போல் அமைத்திருந்தனர். இப்போது அந்த இடமே மாறிவிட்டது. எனக்கென்னவோ இவர்களிடம் பெருங்கற்காலத் தன்மை ஒட்டிக்கொண்டிருப்பது போல் தெரிகிரது.

ஐயத்துக்கு உட்பட்ட இடம்


இந்த இடம் பெயர் குத்துக்கல் வலசை. இந்த கல்லை ஒருகாலத்தில் வழிபட்டதாக இங்குள்ளவர்கள் கூறுகிறார்கள். கேட்டால் இயற்கையாக உருவானதாக கூருகிறார்கள். 

No comments:

Post a Comment