Saturday 18 August 2012

பெருங்கற்கால கிராமமா தென்காசி? -1

குத்துக்கல் வலசை கல்லை நான் இயற்கையாய் எடுத்துக் கொள்ளாததன் காரணங்கள்,


1. இந்த அடிபாகம் கல்லை விழுந்து விடக்கூடாது என்று மனிதர்கள் ஏற்படுத்தியது போன்றே எனக்குத் தோன்றுகிறது. இந்த அடிப்பாகத்தை போல் வேறு சில இயற்கைக் குத்துக்கற்கள் பொருந்துவதாய் இல்லை.
2. மேலும் இதன் மேல்பாகம் இன்னும் ஐயம் ஊட்டுவதாய் உள்ளது. பார்பவர்கள் யாருக்காவது இதன் மேல் பாகத்தின் உருவத்தைக் கணிக்க முடிந்தால் சொல்லவும். ஆனால் இன்னும் நான் மேல் சென்று பார்க்கவில்லை என்பதால் இதை பற்றி உறுதியாகக் கூறுவதற்கில்லை.
3. அடுத்தது இந்த இடம் பெயர் குத்துக்கல் "வலசை" என்பதே. வலசை என்பது வரிசையை குறிக்கும். இன்றும் வலசை போதல் என்ற சொல் கிராமப்புறங்களில் உண்டு. அதற்கேத்தார் போல் இந்த சுற்று வட்டார மக்களும் முன் காலத்தில் இதன் தொடர்சியாக மேலும் 4,5 கற்கள் இருந்ததாக கூறுகின்றனர்.

4. அடுத்தது இதை இந்த மக்கள் வழிபட்டதாகவும், அங்குள்ள மக்களும்.
5. அடுத்தது கல், சின்னம், உருவம் என்று தெய்வ வழிபாட்டின் படிம வளர்ச்சியை இங்கு காணும் சான்றுகள் மறைமுகமாக தெரிவிப்பதாகத் தெரிகிறது. தற்போது இந்த கல்லை விட்டு அங்குள்ள வேறொரு தெய்வத்தை வணங்கியதாக அவர்கள் கூறுவது இதற்கு மேலும் சான்று.

இப்போதைக்கு இதன் அடிப்பாகம் இயற்கையானதா என்பது பற்றிய மாற்றுக்கருத்துக்களை பகிரவும். இதன் வழிபாட்டு முறை பற்றி அடுத்த பதிவில் கூறுகிறேன். கற்கால ஆராய்ச்சியாளர் எவராவது வந்து இதை ஆராய்ந்தால் நன்றாக இருக்கும்.

No comments:

Post a Comment