Wednesday 22 May 2013

கூம்பொடு மீப்பாய் களைதல்?

தமிழ் இலக்கியங்களில் சங்க காலத்திலும் சரி சோழர் காலத்திலும் சரி கலம் செலுத்தும் பாடலகளை குறிக்கையில் கூம்பொடு மீப்பாய் களைதல் என்றே கூறுகின்றன.

மீப்பாய் என்பது பாய்மரக் கப்பலின் பாய் மரத்துணியை மட்டும் குறிக்கும். அதனால் அதைக் களைவதோ விரிப்பதோ இப்போதும் நடைமுறையில் இருக்கும் வழக்காகவே தெரிகிறது. ஆனால் கூம்பொடு (பாய் கட்டப்பட்டிருக்கும் மரம் கூம்பு போல் உள்ளதால் கூம்பொடு எனக் கூறப்படுகிறது) மீப்பாய் களைதல் என்றால் கூம்பையும் ஏற்றி இறக்க தமிழர் கலங்களில் வசதி இருந்ததா? என்ற கேள்வி என்னில் எழுந்தது.


யாங்ஙனம் பாடுவர் புலவர் கூம்பொடு
மீப்பாய் களையாது மிசைப்பரந் தோண்டாது
புகாஅர்ப் புகுந்த பெருங்கலந் தகாஅர் - புறநானூறு


போதம் கொள் நெடுந் தனிப் பொரு இல் கூம்பொடு,
மாதங்கம் வரு கலம் மறுகி, கால் பொர,
ஓதம் கொள் கடலினின்று உலைவ போன்றவே. - கம்பர் இராமாயணம்


மேலுள்ள இரண்டு பாடல்களுமே மடக்கும் கூம்புகளை தமிழர் கலங்கள் பெற்றிருந்தன எனக் காட்டுகின்றன. கம்பராமாயணம் எழுதிய போது கம்பர் தானறிந்தவற்றை சேர்த்தே எழுதியிருக்கிறார்.

20ஆம் நூற்றாண்டு கப்பல்கள் கூம்பை மடக்கும் நுட்பத்தை பயன்படுத்தினரா என அறிய ஆவல்.

No comments:

Post a Comment