Wednesday 19 June 2013

சீனத்துக்கு பாண்டியன் தூது

தமிழர் வரலாற்றில் ஆர்வமுடையோர் பலருக்கு சோழர்கள் சீன நாட்டிற்கு தூதனுப்பியதை நன்கு தெரிந்திருக்கலாம். நான் படித்த முக்கிய வரலாற்று ஆர்வலர்கள் எழுதிய ஆய்வு நூல்களில் இதைக் குறிப்பிடாமல் இருக்க மாட்டார்கள். ஒருவேளை படிப்பவர்களுக்கு தெரியாமல் இருந்தால் விக்கிப்பிடியாவில் சில நூல்களில் இருந்து தொக்குத்து எடுத்த தகவல்களை பின்வரும் இணைப்பில் எழுதியிருக்கிறேன். பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

http://ta.wikipedia.org/s/1yx - சோழர்களின் சீனத் தொடர்பு

ஆனால் பாண்டியர் வரலாறு பற்றி தனியாக எழுதப்பட்ட நூல்களில் கூட பாண்டியர்களுக்கும் சீனர்களுக்கும் இடையில் ஏறக்குறைய 5 முறை தூதுக்குழுக்கள் வந்துள்ளதை எழுதவில்லை.

முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்

http://ta.wikipedia.org/s/cks

இவனைப் பற்றிய ஓரளவு குறிப்புகளை மேற்கொடுத்த விக்கிப்பீடியாவின் இணைப்பு வழி அறியலாம்.  இவன் ஆட்சிக்காலத்தில் பாண்டிய நாடு (அப்போதைய பாண்டிய நாடு என்பது மூவேந்தர் அரசுகள், வட இலங்கை, தெற்கு கர்நாடகம், ஆந்திரம் வரை பரவியிருந்தது அறியப்பட்ட வரலாறு. இவனது சித்தப்பனான வீர பாண்டியன் சுந்தர பாண்டியன் ஆணையின் பேரில் ஜாவா, காடாரம், சீனாவில் சில பகுதிகள், தாய்லாந்து போன்றவற்றை வென்றான் அன்பது அறியப்படாத ஆவணப்படுத்த வேண்டிய வரலாறு.கி.பி 1268 முதல் கி.பி 1311 வரை இருந்த இவனது ஆட்சியில் தமிழகம் உலகு எங்கிலும் காணாத ளவுக்கு சீரும் சிறப்பும் பெற்றிருந்ததாக மார்க்கோ போலோ போன்ற வெளிநாட்டுப் பயனிகள் கூட குறித்துள்ளனர். ஆனால் இதைப் பற்றி எவரும் வரலாற்று நூலில் பெரிதாக கூறவில்லை.

மேலும் இவன் சார்பில் ஜமாலுதீன் என்ற அமைச்சரின் கீழே ஒரு தூதுக் குழு கி.பி.1280ல் சீனாவி
ல் உள்ள ஒரு மன்னனை சந்தித்தது. ஏதோ ஒரு உடன்படிக்கை ஏற்பட்டிருக்க வேண்டும். 

அதையேற்ற அம்மன்னன் யாங்திங் பீ என்ற தன் அவையில் இருந்து ஒரு தூதுவரை அனுப்பி வைத்தான்.  யாங்திங் பீ   கி.பி.1282ல்  பாண்டிய நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன் குறிப்புகள் ஏதும் உள்ளனவா?

பின் 1283ல் பாண்டி நாட்டில் இருந்து ஒரு குழுவும் 

சீனத்தில் இருந்து ஒரு பதில் குழுவும் 

பிற்பாடு பாண்டிய நாட்டில் இருந்து ஒரு குழு 1984ல் சென்றது வரை குறிப்புகள் உண்டு.

ஆனால் இதன் குறிப்புகள் ஏன் அதிக வரலாற்று நூல்களில் சொல்லப் படவில்லை.

ஜய நகர சுந்தர பாண்டிய தேவாதீசுவர நாம ராஜாபிஷேக 

மேலுள்ளது முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஜாவக நாட்டை வென்ற கல்வெட்டு - இந்தோனேசிய சாவக சுமத்ரா தாய்லாந்து பகுதிகளில் உள்ள ஏதோ ஒரு நாட்டில் இது உள்ளது. கா. அப்பாத்துரையார் எழுதிய நூல் மட்டும் இதைக் குறிப்பிடுகிறது. ஆனல் இக்கல்வெட்டு எங்குள்ளது என இன்னும் தெரியவில்லை. பாண்டியர் மெய்கீர்த்திகளில் முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனும், முதலாம் சடயவர்மன் சுந்தர பாண்டியன் கீழ் அவனது தம்பி வீர பாண்டியனும் சீனம், காடாரத்தை வென்றதாக குறிப்புகளுண்டு. ஆனால் இதை தமிழர்கள் கண்டுகொள்ளவே மாட்டார்கள்.

1 comment:

  1. http://fromthenmaduraitotenkasi.blogspot.in/2013/06/blog-post_26.html

    மேலுள்ள இணைப்பில் அப்பாத்துரையார் சாவக நாட்டின் சுந்தர பாண்டியனை தமிழகத்தின் சுந்தரபாண்டியன் என தவறாக எழுதியது சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.

    ReplyDelete